tamilnadu

img

மோடியை ‘டாடி’ என்றழைக்கும் ‘லேடி’யின் வாரிசுகள்! விழுப்புரம் பிரச்சாரக் கூட்டத்தில் டி.கே. ரங்கராஜன் பேச்சு

விழுப்புரம், ஏப்.10-

‘கடந்த தேர்தலில் மோடியா இந்த லேடியா என்று முழக்கமிட்டவரின் வாரிசுகள் என கூறிக்கொண்டு இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் நரேந்திரமோடியை டாடி என்கிறார்கள். இதைவிட ஜெயலலிதாவுக்கு இவர்கள் வேறு என்ன துரோகம் செய்து விட முடியும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கூறினார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விழுப்புரம் மக்களவை தொகுதி வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்தும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டும் கண்டாச்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய டி.கே. ரங்கராஜன்,“ மாற் றங்களைக் கொண்டு வருவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி ஏமாற்றங்களைதான் கொண்டு வந்தார்” என்றார்.செல்லா நோட்டு பிரச்சனையில் மக்களை அலைக்கழித்த மோடி. ஜிஎஸ்டி என்று ஒரு புது மோசடி வித்தையை கொண்டு வந்தார். மதிப்புக் கூட்டு வரி என்ற இந்த ஏமாற்று வித்தை பற்றி சொல்ல வேண்டுமானால் பாலுக்கு வரி கிடையாது டிக்காஷனுக்கு வரி கிடையாது. இரண் டையும் ஒன்றாக கலந்தால் காபி. அதற்கு வரி உண்டு என்றும் கூறினார்.ஒவ்வொரு பொருளுக்கும் வரி போட்டு மக்களை கசக்கிப் பிழிந்த மோடியின் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர அனுமதிக்கலாமா? இவர்களுக்கு துணை நிற்கும் பாமகவின் மாம் பழத்திற்கு ஓட்டு போடலாமா? போடக்கூடாது. பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக இந்த கட்சிகள் டெபாசிட் பெறக்கூடாது எனவும் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் எம்.முத்துவேல் தலைமை தாங்கினார். விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராமமூர்த்தி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உரையாற்றினர்.

;