திருவில்லிபுத்தூர், மே 9 144 தடை உத்தரவு கார ணமாக பல்வேறு தொ ழில்கள் முடங்கிப் போ யுள்ளன. அந்த வகையில் திருவில்லிபுத்தூரில் சல வைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரமும் முடங்கிப் போயுள்ளது திருவில்லிபுத்தூரை பொ றுத்தவரை நகரில் சுமார் 250க்கும் மேற்பட்ட நட மாடும் சலவை தொழிலா ளர்கள் சிறிய வண்டியை வைத்து நகரின் பல்வேறு பகு திகளுக்குச் சென்று அன்றாட கிடைக்கும் துணிகளை தேய்த்து கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வரு வாயை வைத்து தங்கள் குடு ம்பத்தை காப்பாற்றி வரு கின்றனர். இந்நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக கடந்த 45 நாட்களாக சலவை செ ய்யும் சிறியரக வண்டிகளை எங்கும் கொண்டு செல்ல முடியாத நிலையில் வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்து ள்ளனர். இதனால் சலவைத் தொழிலாளர்கள் அன்றாடம் கிடைக்கும் வேலை வாய்ப்புகளை இழந்து கிடை க்கக் கூடிய குறைந்த பட்ச ஊதியத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதுகுறித்து சலவை தொ ழில் செய்யும் ஊழியர் கரு ப்பையா கூறும்போது அன்றா டம் கிடைக்கும் வருமா னத்தை கொண்டு பிழைப்பு நடத்தினோம் .தற்போது வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்க்கை நடத்து வது மிகச் சிரமமாக உள்ளது எங்களுக்கு அரசு நிவாரண மும் வாழ்வாதாரம் மேம்பட உதவியும் செய்ய வேண்டு மென கோரிக்கை விடுத்துள்ளார்.