tamilnadu

img

ஊழியர் விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடும் கரூர் அரசு மருத்துவமனை டீனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூர், பிப்.25- கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரோஸி வெண்ணிலாவின் ஊழியர் விரோத  மற்றும் சங்க விரோத நடவடிக்கைக ளை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  கரூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஊழியர்களின் கோரிக்கைகள் தொ டர்பாக முறையீடு செய்ததற்காக, மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர்  கண்ணனை தொலைதூர மாறுதல் செய்யப்பட்டு இன்றுவரை பணியில் சேர முடியாத நிலை நீடித்து வரு கிறது. மேலும் இவரது ஊழியர் விரோத நடவடிக்கையால் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவரும், கரூர் மாவட்ட தலைவருமான எம்.சுப்பிரமணியன் மற்றும் செவிலியர் சங்க நிர்வாகிகள் நான்கு பேர் உள்ளிட்ட 5 பேரையும் கடந்த ஜூன் 2019 முதல் தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். பின்பு சங்கத்தின் தொடர் முயற்சியால் பணியிட நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு, கடந்த 4 ஆம் தேதி மீண்டும் பணியில்  சேர்ந்தனர். இப்பொருள் சார்ந்து அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் குறித்து உரிய விசாரணை அலுவலர் நியமிக்கப் பட்டு விசாரணை நடைபெற்று வரு கிறது. 

இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரோஸி வெண்ணிலா ஊழியர் விரோதப் போக்கின் ஒரு பகுதியாக கடந்த 20 ம் தேதி திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் தொலைதூர மாறுதல் வழங்கப்பட்டு, உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநில தலைவருமான மு.சுப்பிரமணி யனை திருநெல்வேலி மாவட்டம், தென்காசிக்கும், செவிலியர் சங்க மாநில துணைத் தலைவர் நல்லம்மா ளை திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கும், செவிலியர் சங்க மாவட்ட தலைவர் கார்த்திக்கை ஊட்டிக்கும், மாவட்டச் செயலா ளர் செல்வராணியை திருப்பூருக்கும், மாவட்ட பொருளாளர் தன லட்சுமியை திருவள்ளூருக்கும் பழி வாங்கும் மாறுதல் செய்யப் பட்டுள்ளனர்.

இத்தகைய பழிவாங்கும் நடவ டிக்கையை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிப்ப தோடு, தொடர்ந்து ஊழியர் விரோத போக்குடன் செயல்படும் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணி லாவை கண்டித்தும், மேலும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பழி வாங்குதல் உத்தரவுகளை ரத்து செய்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி புரியும் ஊழியர்களுக்கு அமைதி யான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் மு.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.சக்தி வேல் வரவேற்று பேசினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.மங்கலபாண்டியன், அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில பொதுச்செயலாளர் உ.சண் முகம், சிஐடியு சங்க மாவட்ட தலை வர் ஜிஜீவானந்தம் ஆகியோர் கண்டனவுரையாற்றினர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்  ஜ.ஜெயராஜ், ஆய்வக விற்பனை சங்க மாநிலச் செயலாளர்  எம்.செல்வராணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.