கள்ளக்குறிச்சி, ஜூன் 19- விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை கரியாலூரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள கோடை விழாவை சிறப்பாக நடத்திட அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் அவர்கள் ஆலோசனை நடத்தினார். விழுப்புரம் மாவட்டத்தின் இயற்கை எழிலான சுற்றுலாத்தலமாக விளங்கும் கல்வராயன்மலையில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடை விழா நடைபெறுவது வழக்கம். 2019 ஆம் ஆண்டிற்கான கோடை விழா ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளதையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கான ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:- இந்த ஆண்டு நடைபெற உள்ள கோடை விழாவில் அரசின் ஒவ்வொரு துறையும் தங்கள் துறை சார்பில் நலத்திட்டங்கள் வழங்குவது தொடர்பான அரங்குகளை அமைத்து செயல் விளக்க கண்காட்சி உரு வாக்க வேண்டும். ஒவ்வொரு துறையும் மலை வாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சி கள், காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடு கள், போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது, தோட்டக்கலைத் துறை விழா மேடை மற்றும் பூச்செடிகள் அலங்காரம், கல்வித்துறையினர் கல்வராயன் மலையில் உள்ள பள்ளி மாணவ, மாணவி கள் மூலம் சிறந்த கலை நிகழ்ச்சிகளை நடத்து வதற்கும், விளையாட்டுத் துறை சார்பாக மலைவாழ் மக்களின் விளையாட்டுப் போட்டி கள், மல்லர் கம்பம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பெரியார் நீர்வீழ்ச்சியின் அருகே வனத்துறை சார்பில் அலங்கார வளைவு அமைப்பது, அங்கே உள்ள சோதனைச் சாவடிகளில் மூலம் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்வது, மின்துறை தடையின்றி மின்சாரம் வழங்குவது என ஒவ்வொரு துறையும் திறம்பட கோடை விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவ லர் இரா.பிரியா, கள்ளக் குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மகளிர் திட்ட இயக்குநர் ஈஸ்வரன், சுற்றுலாத்துறை அலுவலர் சின்னசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.