விருதுநகர், மே.18- மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஏழு பேர் விருதுநகரில் உள்ள அன்னை சிவகாமிபுரத்தில் தங்கி யுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒட்டடை குச்சி வியாபாரம் செய்து வந்தனர். முழு அடங்கலால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. சாப்பிடுவதற்கே சிரமப் படும் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க ேண்டுமென மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர்.