tamilnadu

img

மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் புதிய தார்ச்சாலை சேதமடைந்தது

விழுப்புரம், நவ. 1- விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத் தில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ரூ.100 கோடி மதிப்பிலான விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், நோயாளிகளும் மற்றும் கர்ப்பிணிகளும் இங்கு உள்ள சாலை வழியாக வந்து செல்லு கின்றனர், இந்த சாலை கடந்த சில ஆண்டு களாக படு மோசமான நிலையில் இருந்தது,  அதனை கடந்த சில ஆண்டுகளாக சரி செய்ய வேண்டும் என தீக்கதிர் உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்கள் செய்திகளாக வெளி யிட்டு அரசுக்கும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களுக்கும் சுட்டிக் காட்டினர். இதனையடுத்து கடந்த 2018  ஆம் ஆண்டு டிசம்பரில் ரூ.50 லட்சம் மதிப்பில்  சாலைப் பணி டெண்டர் விடப்பட்டு பணியும்  முடிக்கப்பட்டது, ஆனால் பத்து மாதங்க ளில் ரூ.50 லட்சம் மதிப்பிலான புதிய மருத்து வக் கல்லூரி தார்ச் சாலை தரம் இல்லாத நிலையில் பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. உடனடியாக சம்மந்தப்பட்ட துறை பருவ மழை தொடங்கி  உள்ள நிலையில் சாலையை சரிசெய்ய வேண்டும், இல்லை என்றால் மழைக்கு தார்ச்  சாலை தாங்குமா என பொதுமக்கள், நோயா ளிகள் மற்றும் அவசர ஊர்தி ஓட்டுனர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.