விருதுநகர், மே 19- விருதுநகர் அருகே உள்ளது செல்லைநாயக் கன்பட்டி. இங்கு பட்டாசுத் தொழிலாளர்கள் அதி களவில் வசித்து வருகின்றனர். முழு ஊரடங்கால் 50 நாட்களுக்கு மேல் வேலையின்றி தவித்து வந்த னர். இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் பட்டாசுத் தொழிலாளர் குடும்பங்க ளுக்கு காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் கூட லிங்கம் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி.பாண்டியன், தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.நேரு ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிர மணியன் நிவாரணப் பொருட்களை வழங்கினார். பாண்டியராஜன், பாலகிருஷ்ணன், காளியம்மாள், அழகர்சாமி உட்ட பலர் பங்கேற்றனர்.