விருதுநகர், மே 11- விருதுநகர் மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், உடனடியாக பதிவு செய்திட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஏற்கனவே பி.எம். கிசான் திட்டத்தில் பதிவு செய்து, ஆதார் அட்டை விபரங்கள் பதிவேற்றம் செய்யாதவர்கள் உடனடியாக பதிவேற்றம் செய்திட வேண்டும். இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயி கள், உடனடியாக பதிவு செய்திட வேண்டும். இந்த திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூபாய் ஆறாயிரம் வழங் கப்படும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயி ரம் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தில் பதிவு செய்யாத விவசாயி கள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலு வலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். அதே போல, இந்த திட்டத்தில் இந்தாண்டு உதவி தொகை பெற ஆதார் அட்டையில் உள்ள விபரங்கள் வழியே இணைய தளத்தில் விபரங்கள் அமைந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் விபரங்களை பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் ஆதார் அட்டை விபரங்களுடன் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.