திருத்துறைப்பூண்டி தெற்கு வீதி நியாய விலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், பயனாளிகளுக்கு இலவச அரிசி மற்றும் உணவு பொருட்களை வழங்கினார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், ஆட்சியர் ஆனந்த், மாவட்ட கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் பி. ஜெயராமன், துணைப் பதிவாளர் பொது விநியோகத் திட்டம் ஜெ.சாகுல் ஹமீது, வட்டாட்சியர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.