விழுப்புரம், ஜன.12- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஒரத்தூர் கிராமத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதூரு ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா நடை பெற்றது. விழாவுக்கு ஆலய ஊழியர் சாமுவேல் தலைமை தாங்கினார். பின்னர் ஆலய வளாகத்தில் கிறிஸ்தவர்கள் கிராம பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து, திருச்சபை பெரியவர்கள் ஞாயிறு பள்ளி குழந்தைகளுடன் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். அப்போது உலக அமைதி, சமதுவம், சகோதரத்துவம் குறித்தும் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் திருச்சபை ஊழியர்கள் செய லாலர் சேகர், ஜீவானந்தன், ஜெசிநிர்மலா, எஸ்தர், குணசீலி, விரோனிக்காள், எலிசபெத், வாலிபர் சங்கத்தின் தலைவர்கள் மனாசேராஜ், ஆரிஸ், பிராங்க்ளின், விமல் ,சதீஷ் அனிதா ,கிளாரா மற்றும் ஒரத்தூர் கிராம மக்கள் கலந்துகொண்டு பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
மகளிர் கல்லூரி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா மற்றும் பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூ ரித் தலைவர் விமல்சந்த் ஜெயின் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் லிக்மிசந்த், நிர்வாகி சுதர்ஷன் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முத்தவர் டி.பால சுப்பிரமணியன் வர வேற்றார். விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளையுடன் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து கல்லூரி வளாகத்தில் மேள தாளத்துடன் ஊர்வலமாக கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு வந்தனர். பின்னர் அங்கே கரும்பு, பூசை பொருட்களுடன் புதிய பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து மாணவிக ளின் கலை நிகழ்ச்சி, உறிய டித்தல், மாட்டு வண்டி சவாரி, பேராசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்க ளுக்கு இடையே கயிறு இழுக்கும் போட்டி நடை பெற்றது. முடிவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரி துணை முதல்வர் முனைவர் இன்பவள்ளி, மக்கள் தொடர்பு அலுவலர் சக்தி மாலா உட்பட கல்லூரி பேராசிரியைகள், மாணவி கள், பெற்றோர்கள், அலுவலக பணியாளர்கள், கல்லூரி பேருந்து ஓட்டு நர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவிச் செயலாளர் திக்ஷிதா நன்றி கூறினார்.