tamilnadu

img

கட்டாய வசூலில் ஈடுபடும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள்

விருதுநகர், ஜூலை 2- விருதுநகர் ஒன்றியத்திற்கு உப்ட்டது வச்சக்காரப்பட்டி. இங்கு சுமார் 1000?க்கும் மேற் பட்டோர் வசித்து வருகின்றனர். பெண்கள் பட்டாசுத் தொழிலா ளர்களாக உள்ளனர். பொது முடக் கம் காரணமாக வேலையின்றி மிக வும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர், வாங்கிய கடனை வட்டியுடன் உடனே செலுத்த வேண்டும் என பெண்களை நிர்பந்தம் செய்து வந்தனர். மாவட்ட ஆட்சியர், வரும் ஆகஸ்ட் மாதம் வரை மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடனை வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். இருந்த போதும், அந்நிறுவனத்தினர் தொடர்ந்து கெடுபிடி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் கண்டித்தும், கெடு பிடி வசூலில் ஈடுபடும் நுண்நிதி நிறுவனத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் தலைமையில்  விருது நகர் வட்டாட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். பின்பு, துணை வட்டாட்சியரி டம் கோரிக்கை மனு வழங்கி னர். இதையடுத்து, உடனடியாக நுண் நிதி நிறுவன நிர்வாகி களை அழைத்து எச்சரிக்கை விடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்ற னர். போராட்டத்தில் மாவட்டத் தலைவர் எம்.ஜெயபாரத், ஒன்றி யச் செயலாளர் வி.வீரமுத்து,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச் செயலாளர் எம்.முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.