tamilnadu

img

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு

செஞ்சி, ஜுன் 13- விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட எய்யில் கிராமத்தில் வசித்த வர் அஜித்குமார் (38). இவர் பக்கத்து  ஊரான பரயந்தாங்கல் ஊராட்சியில் தெரு விளக்கை மாற்றுவதற்காகச் சென்றுள்ளார். தெரு விளக்கு கம்பத்தில் ஏறி  விளக்கை மாற்றும் போது, மின்சாரம்  தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இதுகுறித்து வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்  பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக்  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

;