விருதுநகர், மே 20- கொரோனா சூழலில் உளவியல் ரீதி யாகப் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மாணவர்களுக்கு தன்னம் பிக்கையை ஏற்படுத்தி, ஆற்றுப்படுத்து தல் செய்த பின்பே 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்திட வேண்டுமென திமுக மாவட்ட இளைஞரணி, மற்றும் மாணவரணியினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளன. இது குறித்து அம்மனுவில் கூறியதாவது: தமிழக அரசு ஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்தப் போவதாக அறி வித்தது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலை யில் ஜூன்15-25 என அறிவித்துள்ளது. அதே நேரத்தில் எதற்கெடுத்தாலும், மத்திய அரசின் அறிவிப்பை பின் பற்றும் தமிழக அரசு, இந்த விஷயத்தில் மட்டும் ஏன் மாறுபடுகிறது. சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூலை மாதம் நடக்க உள்ள நிலையில், ஜூன் மாதமே தேர்வு நடத்த துடிப்பது ஏன்? அதேநேரத்தில் கொரோனா சூழலில் உளவியல் ரீதியாக மாணவர்களை தயார் செய்வதோடு, மாணவர்களை ஆற்றுப் படுத்ததல் வேண்டும். அதன் பிறகு பள்ளி யை தொடர்ந்து இயக்கி விட்டு 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக தென்காசி எம்.பி தனுஷ் எம்.குமார், கே.ஜி.ராஜகுரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் முதன்மை கல்வி அலு வலரிடம் மனு அளித்தனர்.