பிரதமர் விவசாய நிதி உதவி திட்டத்தில் நடைபெற்ற மோசடியை கண்டித்தும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வட்டச் செயலாளர் நாகராஜன் தலைமையில் திங்களன்று (ஆக. 24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன், மாவட்டச் செயலாளர் ஆர்.டி. முருகன், தலைவர் சிவராமன், சிஐடியு நிர்வாகிகள் பி.குமார், வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.