tamilnadu

வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு 50 கிலோ சணப்பை விதைகள் வழங்க முடிவு

கோவை, அக்.6- கோவை மாவட்டத்தில் வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 50 கிலோ சணப்பை விதைகள் இலவசமாக வழங்கப் பட உள்ளதாக வேளாண்துறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வேளாண்துறையினர் கூறியதாவது, மண்ணில் உள்ள நுண்ணி யிர்களை உயிர்ப்பெறச் செய்வதற்கு நுண்ணூட்டச் சத்துக்கள் மிகவும் அவ சியம். ஆனால், அதிகப்படியான ரசாயன உரங்கள் பயன்பாட்டினால் பெரும்பாலா னப் பகுதிகளில் மண் வளமில்லாமல் காணப்படுகிறது. இதனால், சாகுபடி செய் யப்படும் பயிர்களில் நோய் தாக்குதல், வளர்ச்சி பாதிப்பு, மகசூல் இழப்பு போன் றவை ஏற்படுகின்றன. விவசாயிகளுக்கு சாகுபடி செலவு மட்டுமே அதிகரிக்கிறது. இந்நிலையில், மண்ணிலுள்ள நூண் ணூட்டச் சத்துக்களை மீண்டும் வளப்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது. ரசாயன உரங்களைத் தவிர்த்து சணப்பை, தக் கப்பூடு, கொழிஞ்சி போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து உழுது விடுவதன் மூலம் மண்ணிலுள்ள நுண்ணூட் டச் சத்துக்களை மீட்டெடுக்க முடியும். பசுந் தாள் உரப்பயிர்களை நிலங்களில் விதைத்து  பூக்கும் பருவத்தில் நிலத்தோடு சேர்த்து உழவு செய்துவிட வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் துறை சார்பில் பசுந்தாள் பயி ரான சணப்பை விதைகள் வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிக பட்சமாக 1 ஹெக்டேருக்கு 50 கிலோ வரை விதைகள் இலவசமாக வழங்கப்படும். அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க  மையங்களிலும் சணப்பை விதைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப் பட்டுள்ளன. விவசாயிகள் அந்தந்த வட் டார வேளாண் விரிவாக்க மையங்க ளில் ஆவணங்களை அளித்துப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரி வித்தனர்.