tamilnadu

img

பட்டாசு ஆலையில் விபத்து தொழிலாளி பலி

விருதுநகர், ஜூன் 3- சிவகாசி அருகே உள்ள கட்னார்பட்டி யைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (45). இவ ருக்கு சொந்தமான பட்டாசு ஆலை, விருது நகர் அருகே உள்ள ஓ. கோவில்பட்டியில் கிராமத்தில் உள்ளது.  நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலி யம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயா ரிக்கப்பட்டு வருகின்றன. வழக்கம் போல் புதன்கிழமை காலை 30 அறைகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பட்டாசுக்கு வேதிப் பொருட்கள் கலக்கும் அறையில் உராய்வு ஏற்பட்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அறை இடிந்து தரைமட்டமானது. அருகில் இருந்த இரு அறைகளுக்கும் தீ பரவியதால் அந்த அறைகளும் இடிந்து விழுந்தன.  இந்த விபத்தில் மருந்துக் கலவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பெரிய மரு ளுத்தூரைச் சேர்ந்த மல்லீஸ்வரன் (43) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரி ழந்தார்.  ஆமத்தூர் காவல்துறையினர் தீய ணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மல்லீஸ்வரன் உடலை மீட்ட காவல்துறையினர் உடற் கூரா ய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;