விழுப்புரம், டிச. 24- விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.தண்டபாணி (70) சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர் கடந்த 1974 எமெர் ஜென்சிக்கு முன்பு விழுப்பு ரம் ரயில்வேயில் லோகோ ஷெட்டில் பணியாற்றியவர். அப்போது டி.ஆர்.இ.யூ தொழிற்சங்கம் தொடங்க வும், அதில் முன்னணி உறுப்பினராகவும் இருந்து செயல்பட்டவர். தொழிற் சங்க தலைவர்கள் இளங்கோ, எம்.கே.நம்பியார், இராம தாஸ் ஆகியோருடன் பணி யாற்றியவர். அவரது சொந்த ஊரான முண்டியம்பாக்கத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையை துவக்கிய வர். அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் விக்கிரவாண்டி ஒன்றியச் செயலாளராகவும், தற்போது தலைவராகவும் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அவரது உடலுக்கு முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பரமணி யன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், வி. ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துக்குமரன், ஏ.சங்கரன், ஒன்றியச் செயலாளர்கள் வி.கிருஷ்ணராஜ், ஆர்.தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் வி.அர்ச்சு ணன், செயலாளர் கே.சுந்தர மூர்த்தி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.