tamilnadu

விருதுநகரில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100 ஆக உயர்வு

விருதுநகர், மே.24- விருதுநகர் மாவட்டத்திற்கு மகாராஷ்டிரா மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களிலிருந்து வருகை தந்த இரண்டு பேருக்கு கொரோனா  தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை யடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித் துள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தனர். இந்த நிலையில் புதுதில்லியிலிருந்து வந்த பால வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 41 வயதான ஆண், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து திரும்பிய திரு நெல்வேலியைச் சேர்ந்த  24 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள் ளது. இதில் 44 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளனர். மீதமுள்ள 56 பேர் சிவ காசி, விருதுநகர், மதுரை  அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

;