tamilnadu

சென்னையிலிருந்த வந்த தம்பதிக்கு கொரோனா தொற்று

விருதுநகர், ஜூன்.6- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது கலிங்கமேட்டுப்பட்டி.  இப்பகுதியைச் சேர்ந்த 28 வயது ஆண் மற்றும் அவரது 23 வயது மனைவி ஆகியோர் கடந்த ஜூன்2 ல் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊருக்கு வந்தனர். இவர்களிடம் சுகாதாரத்துறையினர் இரத்த மாதிரிகள் எடுத்து பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,  இருவரையும் சிவகாசி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால், விருதுநகர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது.

;