tamilnadu

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்வு

விருதுநகர், மே.10- விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண் ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கெனவே 37 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, அனைவரும் மதுரையில் உள்ள தனி வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சையளித்து வந்தனர். இதில், 31 பேர் குணமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 6 பேர் மட்டும் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த நிலையில், சென்னை, வடபழனி யைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் சிவகாசி நகராட்சிப் பகுதிக்கு வந்தார்.

இதே போல், சாத்தூர், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்திற்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணி யாற்றிய 58 வயது முதியவர் ஒருவர் வந்தி ருந்தார். மேற்படி இருவரையும் சுகாதா ரத்துறையினர் பரிசோதனை செய்தனர். இதில், இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டனர்.  இதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது. 

;