மரக்காணம், மார்ச் 22- கொரோனா வைரஸ் எதிரொலி யாக இந்தியாவில் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. வியாபாரங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள் ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் தர்பூசணி விவசாயிகளும் இதில் பாதிக்கப் பட்டுள்ளனர். மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வட நெற்குணம், நகர், கந்தாடு, நல்லம் பாக்கம், ஆலத்தூர், நடுக்குப்பம், அடசல், முன்னூர், அடவல்லிக்குப் பம், ஆலக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலத்தில் தர்பூசணி பயிரிட்டிருந்தனர். கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் தர்பூசணி கள் அறுவடை செய்யும் பணி மும்முர மாக நடைபெற்று வந்தது. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் மரக்காணம் பகுதிக்கு வந்து தர்பூ சணி பழங்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் எதிரொலி யால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்க ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எல்லையில் உள்ள சோதனை சாவடிகளும் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மரக்காணத் துக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக கணிசமாக குறைய தொடங்கியது. தர்பூசணி பழங்களை வாங்க வியா பாரிகள் அதிகளவில் வரவில்லை. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த தர்பூசணி பழங்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் தர்பூசணி பழங்களை அறுவடை செய்யாமல் வயல்களிலேயே விட்டுள்ளனர். அதில் பல தர்பூசணி பழங்கள் அழுகி சேதமாகி உள்ளது. இதனால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். நாங்கள் ஆங்காங்கே கடன் வாங்கி கஷ்டப்பட்டு தர்பூசணி செடிகளை வளர்த்து பாதுகாத்து வந்தோம். தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு டன் தர்பூசணி பழம் ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக வெளிமாநில வியாபாரி கள் இங்கு வந்து தர்பூசணி பழங்களை கொள்முதல் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே அறுவடை செய்து வைத்திருக்கும் தர்பூசணி பழங்களை வியாபாரி களிடம் விற்க முடியாமல் தவித்து வருகிறோம். மேலும் விளைநிலங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள தர்பூசணி பழங்களை அறுவடை செய்து ஏற்றுமதி செய்ய வழியில்லா மல் அதனை அப்படியே விட்டு விட்டோம். இதனால் ஏராளமான தர்பூசணி பழங்கள் வயல்வெளிகளி லேயே அழுகி போய்விட்டன. கடந்த ஆண்டு தர்பூசணி பயிரிட்ட தால் லாபம் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதிகள வில் தர்பூசணியை பயிரிட்டோம். இந்த முறை தர்பூசணி விளைச்சல் அதிகளவில் இருந்தது. பொதுவாக விவசாயிகள் பல வழிகளில் நஷ்டம் அடைந்து வருகி றோம். ஆனால் கொரோனா வைரஸ் எதிரொலியாக நாங்கள் தற்போது நஷ்டத்தை சந்தித்துள்ளோம். அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மரக்காணம் பகுதியில் தற்போது அறுவடை செய்து ஏற்றுமதி செய்யப்படாமல் 50 ஆயிரம் டன் தர்பூசணி பழங்களை விவசாயிகள் ஆங்காங்கே குவித்து வைத்துள்ள னர். இதனால் ரூ.15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர். மேலும் ஒரு சில சிறிய வியாபாரி கள் குறைந்த விலைக்கே தர்பூசணி பழங்களை வாங்கி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.