விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச் சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அக் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் மாநிலத் தலைவர்கள் கேவி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, எம்பி.விஷ்ணுபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி, எஸ். ஜெகத்ரட்சகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.