விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பெற்றுள்ள அனைத்துவகையான கடன்களையும் ரத்து செய்ய வேண்டும், சிறு, குறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (மே 27) நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக, திருவள்ளூர், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.