tamilnadu

img

பெண் சமத்துவத்திற்கு இருபாலாரும் இணைந்து போராட வேண்டும்

மாதர் சங்க தலைவர் வாலண்டினா பேச்சு

சென்னை, டிச. 13- எல்ஐசியின் வளர்ச்சியும் -  பெண்களின் பங்களிப்பும் என்ற  தலைப்பில் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சென்னை கோட் டம் 2ன் மகளிர் துணைக்குழு சார்பில் வியாழனன்று (டிச12) அயன்புரத்தில் கலைமாலை நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக வளர்ச்சிக்காக  இந்திய  பெண்களின் பங்கு அளப்பறி யது என்ற தலைப்பில்  அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத்தலைவர் வாலண்டினா பேசியதாவது: இந்திய சுதந்திர போராட் டத்தில்  பெண்களின் பங்கு ஈடு இணையற்றது. போராடி பெற்ற  சுதந்திர இந்தியாவில் பெண் களின் உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்பட்டுவருகிறது. பெண்  கள், குழந்தைகள் வயதுவித்தி யாசமின்றி பாலியல் பலாத்கா ரத்திற்கு உள்ளாக்கப்படு கின்றனர். சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் பெண் ஆணாதிக்கவாதிகளால் தாக்கு தலுக்கு உள்ளாக்குவதும்  எரித்துக்கொல்லப்படுவதும் சகஜமாக நடக்கிறது. சாதி வெறியர்களாலும் வக்கிரமனம் படைத்த சிலஆண்களாலும் பெண்கள் தொடர்ந்து  தாக்கு தலுக்குள்ளாகி வருகின்றனர்.  ஐதராபாத்தில், உன்னாவில் பெண் கொடூர கொலைக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்தியாவில் முன்னோடி மாநிலம் உத்திரபிரதேசம் என்று மோடி பேசிக்கொண்டிருக்கும் இச்சூழலில் அங்கு தான் பெண்  கள் மீதான வன்முறை அதிகம்  நடப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  பாலியல் குற்ற வாளிகள் பெரும்பான்மையினர் பாஜக வில் இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் எல்லா துறையிலும் மகளிர்  வெற்றிக்கொடி கட்டிவருகின்ற னர். ஆனால்  நகைச்சுவை நடி கர் எஸ்.வி.சேகர் ஊடகத்தில் பெண்களின் பணிகள் குறித்து கேவலமாக பேசிவருகிறார். இதனை தட்டிக்கேட்க முடியாத திராணியற்ற அரசாக எடப்பாடி அரசு இருக்கிறது.  பாலியல் குற்றச்சாட்டில் பெயர் அடிபடுகிறதே என்று தமிழ்நாடு ஆளுனரை கேள்வி கேட்ட பெண்ணிற்கு பதில் அளிக்  காமல் அவரது கன்னத்தை தட வும் அவலம் இங்கு மட்டும்  தான் நிகழ்கிறது. அமைச்சர் ஜெயக்குமாரிடம் திமுக சட்ட மன்ற வெளிநடப்பு குறித்து ஒரு  பெண் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு பதில் நீங்கள் அழகாக இருக்கு றீர்கள் என்று சம்மந்தம் இல்லா மல் பதிலளிப்பது என்ன நியா யம். தமிழகத்தில் இருக்கும் பெண்களில் 30விழுக்காடு பெண்  கள் மட்டும் தான் கன்னித் தன்மையோடு இருப்பதாக ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி திமி ரோடு பேசும்  தைரியம் எப்படி வந்தது.   சுயமரி

சுயமரியாதையோடும் பாது காப்போடும் வாழ முடியாத நாடாக தமிழகம் மாறிவருவதாக சமூக செயல்பாட்டாளர்களின் கேள்விக்கு ஆட்சியாளர்களின் பதில் என்ன.  பெண்களின் மீதாக  பாலியல் வன்முறைக்கு பெண் கள் தான் காரணம் என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் முயற்சி நடக்கிறது. நீதித்துறையும் காவல்துறையும் அவர்களின் பணிகளை ஒழுங்காக செய்கி றதா என்ற கேள்வி எழுகிறது.   ஆண்களும் , பெண்களும் இணைந்தால் தான்  பெண்  சமத்துவம் பேணி காக்கப்ப டும். பொதுத்துறை பாதுகாப் பிற்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு ஜனநாயக மாதர் சங்கம் என்றும் உறுதுணையாக இருக்கும்.     காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் ஆர்.சர்வமங்களா தலைமை தாங்கினார். விழாவில் புதுகை பூபாளம் கலைக்குழுவினரின் நையாண்டி தர்பார் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக மக ளிர் துணைக்குழு அமைப்பாளர் கே.துளசி நன்றி கூறினார்.