விழுப்புரம், மே 9- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்டது சே.பூதூர் கிரா மம். இங்கு கடந்த 2010ஆம் ஆண்டு கனிம வளத் துறையின் மூலம் மலை கல்குவாரி ஒப்பந்தம் விடப்பட்டது. இதனை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் ஒப்பந்த விதிமுறை களை மீறி அதிக சக்தி வாய்ந்த வெடி மருந்து களை பயன்படுத்தி வெடிக்கச் செய்துள்ளார். இதனால் கல் குவாரிக்கு அருகே 50 மீட்டர் சுற்றளவில் உள்ள குடியிருப்பு பகுதியில் அதிர்வு ஏற்பட்டு வீடுகள் விரிசலடைந்து உள்ளன. பொது மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு கல் குவாரியில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரி ழந்தார். இதையடுத்து குவாரி செயல்பாடு தற்காலிகமாகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி சனிக்கிழமை (மே 9) தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஆர்.டி.முருகன் தலைமையில் அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.