புளியம்பட்டி டிச. 18- : ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலையம் சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையா சிரியை உமா கெளரி தலைமை வகித் தார். இந்நிகழ்ச்சியில் புளியம்பட்டி காவல் ஆய்வாளர் எஸ். பிரபாகரன் பேசு கையில், இன்றைய சூழலில் பெண்க ளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறை சார்பில் “காவலன்” எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. இரவு நேரத்தில் தனக்கு பாது காப்பற்ற சூழலை உணரும் பெண் கள், செயலியில் உள்ள SOS எனும் பொத்தானை அழுத்தினால் போதும், அழைப்பவரின் இருப்பிடம் குறித்த தகவல் ஜிபிஎஸ் மூலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனே சென்று விடும். அடுத்த சில நிமிடங்க ளிலேயே காவல்துறை அந்த பெண் உள்ள இடத்திற்கு வந்து நிற்கும். செய லியில் உள்ள SOS பொத்தானை அழுத்தும் போது, செல்போனில் உள்ள கேமரா தானாகவே 15 விநாடிகளில் வீடியோ எடுத்து கட்டுப்பாட்டு மையத் திற்கு அனுப்பி விடும். செல்போன் சிக் னல் இல்லாத இடங்களிலும் குறுஞ் செய்தி கிடைக்கும் வகையில் வடிவ மைக்கப்பட்டுள்ள இந்த செயலியை ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழி களில் பயன்படுத்த முடியும் என்றார். மேலும், இதில் காவல் உதவி ஆய்வா ளர் சுகுமார், தனிப்பிரிவு காவலர் சதாசி வம், விடியல் அறக்கட்டளை செயலா ளர் எஸ். ஜெயகாந்தன் ஆகியோர் காவ லன் செயலியின் சிறப்புகள் குறித்து பேசினார்கள். இதன் பின்னர் காவ லன் செயலி செயல்படும் விதம் குறித்து மாணவிகளுக்கு விளக்கப் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியை கள், மாணவிகள் உள்பட ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்.