tamilnadu

விருதுநகரில்  ஆட்டோ மாயம்

விருதுநகர், ஜூன் 14- விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (44). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வரு கிறார். இவர் வழக்கம் போல பழைய பேருந்து நிலையம் முன்பு தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது ஆட்டோவைக் காணவில்லை. அவர், மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.