tamilnadu

img

ஆக்கிரமிப்பில் அருந்ததியர் சுடுகாடு: சாலையில் புதைக்கப்பட்ட சடலம்

வாழும் போதும் ஒதுக்கி வைக்கப்படும் அருந்ததிய மக்கள் இறந்தபின்னும் இறந்தவர் உடலை புதைக்க இயலாத வகையில் அவர்களுக்கான சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டு சடலங்களை பாதையிலேயே புதைக்கும் அவலம் நிகழ்ந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி அருகே உள்ள மாடூர் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல்லாண்டு காலங்களாக இங்கு ஏதாவது இறப்பு ஏற்பட்டால் இறந்தவர்களை அருகிலுள்ள புறம்போக்கு நிலத்தில் புதைத்து வந்துள்ளனர்.ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்திற்குப் பக்கத்தில் இருக்கும் நிலத்தை வாங்கிய ஒருவர் தன் நிலத்திற்கு பக்கத்தில் பிணங் களை புதைப்பதா என்ற எண்ணத் தில் வேலி போடுகிறேன் என்ற பெயரில் அருந்ததியர் உடலை புதைக்கும் சுடுகாட்டையும் சேர்த்து வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள் ளார். இது தொடர்பாக இச்சமூக மக்களின் சார்பில் கள்ளக்குறிச்சி வட்டாட்சியருக்கும் உரிய அதிகாரிகளுக்கும் பலமுறை மனு அளிக்கப் பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் வெள்ளியன்று இங்கு வசிக்கின்ற மொட்டையன் என்பவரின் மனைவி காந்தேரி (68) என்பவர் இறந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லாததால் அவரது உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர்.இது குறித்து அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.எம். ஜெய்சங்கர், வட்டச் செயலாளர் பி.மணி, மாவட்டக் குழு உறுப்பினர் அ.பா.பெரியசாமி, மற்றும் ஆர்.செல்வராஜ், அருள் ஆகியோர் மாடூர் கிராமத்திற்கு சென்று அருந்ததிய இனமக்களை சந்தித்தனர்.பின்னர் இறந்தவர் உடல்களை புதைக்க இடம் இல்லாததையும், ஆக்ரமிப்பை அகற்றி சுடுகாடு அமைத்துத் தரக் கோரியும் இறந்தவர் காந்தேரியின் உடலை எடுத்து வந்து சென்னை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்ய திட்டமிட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத் ததின் அடிப்படையில் கள்ளக் குறிச்சி வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் மற்றும் தியாகதுருகம் காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து உரிய இடத்தை அளந்து சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். பின்னர், மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி நடைபெற இருப்பதால் அந்த நிகழ்வு முடிந்து அதன்பின்னர் மாடூர் கிராமத்தில் அருந்ததிய மக்களுக்கு உரிய இடம் ஒதுக்குவது என ஒப்புக் கொண்டதின் அடிப்படையில் மறியல் போராட்டம் நடத்தப் படாமல் கைவிடப்பட்டது. பின்னர் இறந்தவரின் உடலை சுடுகாட் டிற்குச் செல்லும் வழியில் பாதையிலேயே குழிதோண்டி புதைத்தனர்.