விழுப்புரம், பிப்.5- விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:- விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு, 95 சமையலர் பணியிடங்களுக்கு ரூ.15.700 மாத ஊதியம். தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். சமையலர் பணியில் அனுபவம் உள்ள வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். தகுதியான நபர்கள் விழுப்புரம் மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப் பங்களைப் பெற்று நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நல அலுவலகத்துக்கு வருகிற 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.