விருதுநகர், மே16- விருதுநகர், திருநெல்வேலி, தென் காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தமி ழக அரசின் தட்கல் புதிய கூடுதல் மின் பளு திட்டம் 2020-21-இல் சேர்ந்து பயன் பெறலாம் என மண்டல தலைமைப் பொறி யாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஏற்கனவே, மின் இணைப்புப் பெற்றி ருந்தாலும், மின் இணைப்பில் அனுமதிக் கப்பட்ட மின் பளு மற்றும் கூடுதலாக தேவைப்படும் மின் பளுவைச் சேர்த்து, அதவாது மொத்தம் 15 எச்.பி க்கு மிகா மல் மின்சாரத்தை (தட்கல் புதிய கூடுதல் மின்பளு திட்டம்) பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும் பும் விவசாயிகள் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் தங்களது பகுதிக்கு உட்பட்ட செயற்பொறியாளர் அலுவல கங்களில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.