tamilnadu

img

வீட்டுக் குடிநீர் இணைப்பு வசூலில் முறைகேடு

தர்மபுரம் ஊராட்சித் தலைவி மீது அனைத்துக் கட்சிகள் புகார்

நாகர்கோவில், ஆக.28- தர்மபுரம் ஊராட்சியில் வீட்டுக்குடிநீர் இணைப்புக்காக பொது மக்களிடமிருந்து முறைகேடாக பணம் பெற்று மோசடி செய்த ஊராட்சி தலைவி மற்றும் செய லாளர் மீதும், அரசின் விதிகளை மீறி ஊராட்சி அலுவலகத்தில் வந்து அமர்ந்து நிர்வாக நடவடிக்கையில் நேரடியாக ஈடு பட்டு வரும் ஊராட்சி தலைவியின் கணவர் ஆர்.கணேசன் மீதும், உடந்தையாக இருந்து வரும் அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தப்பட்டுள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சி யர் பிரசாந்த் வடநேரேவிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தர்ம புரம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்கப்படாத அனைத்து வீடுகளுக்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத் தில் குடிநீர் இணைப்பு வழங்கிட மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஊராட்சி தலைவி மற்றும் செயலாளர் ஆகியோர் குடிநீர் இணைப்பு வழங்குவ தாக மக்களிடமிருந்து ரசீது இல்லாமல் முறைகேடாகவும், சட்ட விரோதமாகவும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா காலத்தில் வறுமையில் வாடும் மக்களை ஏமாற்றி கூடுதல் தொகை பெறப்பட்டுள்ளது. 

மேலும், ஊராட்சித்தலைவியின் கணவரும், முன்னாள் ஊராட்சி தலைவ ருமான ஆர்.கணேசன் வார்டு உறுப்பின ராக கூட தேர்வு செய்யப்படாத நிலையில், அரசின் விதிகளை மீறி தினமும் பெரும்பா லான நேரங்களில் ஊராட்சி அலுவல கத்தில் வந்து அமர்ந்து ஊராட்சியின் நிர்வாக நடவடிக்கைகளில் நேரடியாக தலையீடு செய்து வருகிறார். ஊழியர்க ளை இயக்குவதும், ஒப்பந்தக்காரர்க ளுக்கு பணி பங்கீடு செய்வதும், பண பரிவர்த்தனையில் ஈடுபடுவது என தலையீடு செய்து வருகிறார். ஊராட்சி யின் அதிகார மையமாக அவர் செயல் பட்டு வருகிறார். தற்போது, வீட்டுக்குடிநீர் இணைப் பில் நடைபெற்ற முறைகேட்டிற்கும், அதன் மூலம் ஊராட்சிக்கு மிகப்பெரும் அவப் பெயர் ஏற்படுவதற்கும் ஆர்.கணேசன் என்பவரே காரணமாக இருந்து வருகிறார். இதுபோன்ற செயல்களுக்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சிலரும் உடந்தை யாக இருந்து வருகின்றனர். எனவே, தர்மபுரம் ஊராட்சியில் குடிநீர் இணைப் பில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் மீதும், விதிகளை மீறி செயல்பட்டு வரும் ஊராட்சித்தலைவியின் கணவர் மீதும், உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுத்தி டுமாறு அனைத்துக் கட்சிகள் சார்பில் வேண்டுகிறோம் என அதில் கூறப்பட்டுள் ளது. இந்த மனுவை சட்டமன்ற உறுப்பினர் ஜி.ஜே.பிரின்ஸ், காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் ஆர்.ராதா கிருஷ்ணன், கிழக்கு வட்டாரத் தலைவர் எஸ்.ஏ.பி.அசோகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.டி.ராஜகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் தி.திருமா செந்தில் ஆகியோர் மாவட்ட ஆட்சியரி டம் அளித்தனர்.