அருப்புக்கோட்டை, ஜூலை 4- அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவநத்தம் பகுதியில் 100 நாள் வேலை தர மறுக்கும் ஊராட்சி நிர்வா கத்தைக் கண்டித்து விவசாயக் கூலித் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றி யத்திற்கு உட்பட்டது பாலவநத்தம் ஊராட்சி. இங்கு ஒரு பகுதியினருக்கு மட்டும் 100 நாள் வேலை தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெற்கூர் உள்ளிட்ட பிற பகுதியைச்சேர்ந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்து அட்டை உள்ள தொழிலாளர்களுக்கு வேலை வழங்கவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டும் வேலை வழங்கவில்லை. இதனால் தன்னெழுச்சியாகத் திரண்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலை மையில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த துணை காவல் கண்கா ணிப்பாளர் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை, மாவட்டச் செயலாளர் ஆர். சந்திரமோகன், ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ஜோதிபாசு, பத்திரகாளி, வட்டார வளர்ச்சி அலுவலரு டன் பேச்சுவார்த்தை நடத்தினார். திங்கள் கிழமை அனை வருக்கும் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.