tamilnadu

img

ரயில் பெட்டிகளைத் தனி வார்டுகளாக மாற்றியது ஏன்?: ரயில்வே விளக்கம்

சென்னை ஏப்.10- ரயில் பெட்டிகளை கொரோனா தனி  வார்டாக மாற்றியது ஏன் என்பது குறித்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு  ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள் ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை வழங்க 500 ரயில் பெட்டிகளைத் தனி வார்டுகளாக மாற்றும் பணியில் தெற்கு ரயில்வே நிர்வா கம் ஈடுபட்டுள்ளது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முனுசாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே ரயில் பெட்டி கள், பணிமனைகள் போதிய சுகாதாரம் இல்  லாமல் இருக்கும் நிலையில், ரயில் பெட்டி களை கொரோனா தனி வார்டாக மாற்றக்  கூடாது என்று மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்திய நாதன் காணொலி காட்சி மூலம் மீண்டும் விசாரித்தார். அப்போது தெற்கு ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தெற்கு ரயில்வே பெட்டிகள் மருத்துவமனையாக மாற்றவில்லை. தனிமைப்படுத்தும் வார்டு களாக மட்டுமே மாற்றப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பொது மக்கள் மத்தியில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் போது, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாதபட்சத்தில் மட்டுமே, ரயில் பெட்டிகள் தனி வார்டு களாக பயன்படுத்தப் படும். மருத்துவமனை இல்லாத கிராமங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அங்கு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு இந்த பெட்டிகள் கொண்டு செல்லப்படும். அங்கு முதற்கட்ட தொற்று அறிகுறி உள்ள வர்கள் மட்டும், இந்த பெட்டிகளில் தனி மைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்  லப்படுவார்கள்’ என்று கூறினார். இதைய டுத்து, இந்த வழக்கில் தகுந்த உத்தரவு பிறப்  பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.