tamilnadu

img

‘மோடி அரசிடம் கருத்து கூறினால் எடப்பாடி அரசு எரிச்சலடைவது ஏன்?’

திருச்சிராப்பள்ளி, ஆக.20- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதிய தேசிய கல்விக் கொள்கை யை முழுவதும் திரும்பப் பெற வலி யுறுத்தி கல்வி உரிமை மாநாடு வரும் 23ம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.   இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சியில் செவ்வாய் அன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் ச.தமிழ்ச் செல்வன் கூறியதாவது: முந்தைய தேசிய கல்வி கொள்கைக் கும் இப்போது கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கைக்கும் வேறு பாடு உள்ளது. தற்போது கல்வியை அர சியலின் கீழ் கொண்டு வந்துள்ளனர். பிர தமர் தலைமையிலான குழுதான் கல்வி யை தணிக்கை செய்ய உள்ளனர். கல்வி என்பது படைப்பிற்கு முக்கியமானது. கல்வி கலாச்சாரத்தின் முக்கிய அம்சம். இதனை அரசியல் தலைவர் கீழ் கொண்டு வருவது சரியல்ல. புதிய கல்விக் கொள்கையின் மூலம் கல்வியாளர்கள் கல்வியில் தங்களுக் கான சுதந்திரத்தை இழந்து விடுவர். பாடத் திட்டங்களை மொழிபெயர்க்கும் வேலையைத் தான் செய்ய வேண்டி இருக்கும். 

புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து கேட்கிறார்கள். கருத்து கூறி னால் ஏற்க மறுத்து கோபப்படுகிறார்கள். புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கேரளாவில் வீடு, வீடாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா வில் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ராஜஸ்தானில் அரசே ஏற்க மறுக்கிறது. தில்லியில் ஆராய்ச்சி யாளர்கள் போராடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நோட்டீஸ் கொடுக்கக் கூட போலீசார் கெடுபிடி காட்டுகின்றனர்.  ஆசிரியர், பெற்றோர் கழகம் மூலம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மிகப்பெரிய இயக்கத்தை நடத்துவோம். மக்களை நம்புவோம். மாற்றம் நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது வரவேற்புக்குழு செயல் தலைவர் கவிஞர் நந்தலாலா, திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, தமுஎகச மாவட்டச் செய லாளர் ரங்கராஜன் ஆகியோர் உடனி ருந்தனர்.