tamilnadu

img

ரஜினி மீது எடுத்த நடவடிக்கை என்ன?: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு

சென்னை,மார்ச் 4- பெரியார் பற்றி நடிகர் ரஜினி காந்த் கூறிய கருத்து சர்ச்சை யான நிலையில், அவர் மீது திரா விடர் விடுதலைக் கழகம் அளித்த  புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “சென்னையில் ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற்ற  துக்ளக் இதழின் ஆண்டு விழா வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,  1971ஆம் ஆண்டு சேலத்தில்  பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்  வாண உருவங்களை எடுத்துச் சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார். 

பெரியார் பற்றி உண்மைக்கு மாறான தகவலைப் பரப்பி அவ ரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்ப டுத்தியதுடன், பொது அமை தியை குலைக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ள தால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திராவிடர் விடு தலைக் கழகம் சார்பில் சென்னை  திருவல்லிக்கேணி காவல் நிலை யத்தில் ஜனவரி 18 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இப்புகாருக்கு இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி, சென்னை எழும்பூர் இரண்டாவது பெருநகர  குற்றவியல் நடுவர் நீதிமன்றத் தில், திகவின் சென்னை மாவட் டத் தலைவர் உமாபதி மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதி பதி ரோஸ்லின் துரை முன்னி லையில் விசாரணைக்கு வந்த போது, ரஜினிகாந்த் மீது திராவி டர் விடுதலைக் கழகம் அளித்த புகாரில் என்ன நடவடிக்கை எடுக்  கப்பட்டது என சென்னை காவல் ஆணையர், திருவல்லிக் கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

;