பழனி, ஏப்.13- பழனி அருகே கொடைக்கானல் செல்லும் சாலையில் அமைந்துள்ள குட்டி கரடி மலைக் கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள். 144 தடை உத்தரவை அடுத்து வாழ்வாதாரத்திற்கு தவித்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாலிபர் சங்கம் சார்பில் அரிசி, பருப்பு, மளிகைச் சாமான்கள் காய்கறிகள் வழங்கப்பட்டது. வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் திருமலை நாதன், மாவட்டக் குழு உறுப்பினர் முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், சின்னசாமி, துரைச்சாமி உள்ளிட்டோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.