tamilnadu

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூலை 28- தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை குறைந்துள்ளதாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்க ப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமை நிலவரப்படி தென்மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையில் 27 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 1 சென்டிமீட்டர் மழை பதிவா கியுள்ளது. 

;