tamilnadu

img

அமைச்சர் சீனிவாசன் நிகழ்ச்சியில் காற்றில் பறக்கவிடப்பட்ட சமூக இடைவெளி

திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கலந்து கொண்ட விழாவில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. போட்டோவுக்கு போஸ் கொடுக்க முண்டியடித்தனர் கழக கண்மணிகள்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் வியாழன் முதல் வருகின்ற மே மாதம் 3ம் தேதி வரை காலை, மதியம், இரவு என மூன்று நேரமும் முட்டையுடன் கூடிய இலவச உணவு வழங்கும் திட்டத்தை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் துவக்கி வைத்தார்.

 இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள், காவல்துறையினர் அதிமுகவினர் மற்றும் இலவச உணவை வாங்க வந்த பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த விழாவின் போது சமூக இடைவெளியை பின்பற்றாமல் அனைவரும் ஒன்றாக புகைப்படக்காரர்கள், வீடியோ கிராபர்கள் எடுக்கும் படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர் .அதேபோல் புகைப்படம், வீடியோ எடுக்கும் ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்று வீடியோ போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

;