tamilnadu

img

சாத்தான்குளம் சம்பவம்: வணிகர்கள் முழு கடையடைப்பு

சென்னை ஜூன் 26- சாத்தான்குளத்தில் காவலர் கள் சித்ரவதையால் தந்தை-மகன் பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் சம்பந் தப்பட்ட காவலர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யும் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் கடை யடைப்பு போராட்டம் நடை பெற்றது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர்கள் நடத்திய கொடூர  தாக்குதலுக்கு தமிழகம் முழுவ தும் கண்டனம் வலுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி தூத்துக்குடி மாவட்  டம் திருச்செந்தூர், காயல்பட்ட ணம், கோவில்பட்டி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்  கப்பட்டுள்ளன. விளாத்திகுளத் தில் ஜெயராஜ், பென்னிக்ஸின் உருவப்படத்திற்கு மெழுகு வர்த்தி ஏற்றி மலர்தூவி வியாபாரி கள் அஞ்சலி செலுத்தினர். சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்கனவே முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழ்நிலையில் மருந்து,  அத்தியாவசிய கடை உரிமை யாளர்களும் இந்தப் போராட்டத்  திற்கு முழு ஆதரவு கொடுத்து  கடைகளை அடைத்தனர். விழுப்புரம், கடலூர், திரு வண்ணாமலை, வேலூர் கிருஷ் ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. சேலம் மாவட்டத்தில் மருந்தகங்கள் உட்பட 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளும், திருப்பூர் மாவட்டத்தில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளும் அடைக் கப்பட்டிருந்தன. நெல்லை, மதுரை, திண்டுக்  கல், கரூர், திருச்சி, கன்னியா குமரி மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் மூடப்பட்டுள்ளன.