tamilnadu

img

பாஜக ‘சித்து’விளையாட்டு

மு.க.ஸ்டாலின் சாடல்

சென்னை,நவ.23- மகாராஷ்டிராவில் பாஜக சித்துவிளையாட்டு என்று மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது? ‘ஜனநாய கப் படுகொலை’ என்று சொல்வது கூடச் சாதாரணமான சொல்லாகி விடுமோ, நடந்திருப்பதின் கடுமை யைக் குறைத்து விட்டதாகி விடுமோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.  அரசியல் சட்ட நெறிமுறைக ளையே காலில் போட்டு மிதித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, மாநில ஆளுநரைத் தலையாட்டி பொம்மையாக்கி, குடியரசுத் தலைவர் மாளிகை மூலமாகவும் இறுதியில் மறை முக மிரட்டல்கள் மூலமாகவும், ஆட்சியில் உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என்பது? பா.ஜ.க. சித்து விளையாட்டு என்பதா? இந்திய ஜனநாய கத்தின் முகத்தில் கரி பூசப்பட்டு ள்ளது. இது மாபெரும் வெட்கக் கேடு! மாறாத தலைகுனிவு! இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.