tamilnadu

img

வாழைத்தார்களின் விலை கிடு கிடு உயர்வு

குமரி, செப். 3- ஓணம் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. குளச்சல், தக்கலை, திங்கள் சந்தை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல்  சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடி, பல்லாயிரம் ஏக்கர் பரப்பள வில் நடைபெற்று வருகிறது. நேந்திரம், செவ்வாழை, மட்டி, பூவன், சிங்கன்,  ரஸ்தாளி, பேயன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வாழை ரகங்களை விவ சாயிகள் பயிரிட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் வாழை சாகுபடி செய்  யப்படும் இப்பகுதியில் இருந்து உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டிற்கும் அதிகளவில் வாழை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தையொட்டி அமைந்துள்ள இப்பகுதியில் அம்மாநில  பண்டிகைகளை ஒட்டி நேந்திரன், செவ்வாழை போன்றவை அதி களவில் பயிரிட்டு வருகின்றனர். கடந்தாண்டு கேரளாவில் பெய்த கனமழை யால் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டதால், வாழை விவசாயி கள் நஷ்டத்தை சந்தித்தனர். இந்தாண்டு, ஓணம் பண்டிகை களைகட்டியுள்ள நிலையில்,  நேந்தி ரம், செவ்வாழை காய்களுக்கு மவுசு கூடியுள்ளது. இதனால், அவற்றின்  விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், வாழைத்தார் அறுவடையில்  விவசாயிகள் முனைப்புக்காட்டி வருகின்றனர். சாதாரண நாட்களில் நேந்திரம் பழம் ஒரு கிலோ 30 முதல் 35 வரை விற்  பனையான நிலையில், தற்போது 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.