tamilnadu

img

ஆதரவற்ற 120 பேருக்கு உணவளிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

திண்டுக்கல் ,ஏப்.22- திண்டுக்கல் ஒன்றிய பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் உணவின்றி தவிப்பவர்களுக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியக் குழு சார்பாக தினசரி 120 பேருக்கு உணவு அளித்து வருகிறார்கள்.

கொரோனா நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது . இதில் ஆதரவற்றவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது .இதனை யடுத்து சாலையோரங்களில் மற்றும் பாலத்தின் அடியில் ஆங்காங்கே உணவின்றி தவிப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் சேகரித்து அவர்களுக்கு ஒரு வேளை உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் அஜாய் கோஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரத் குமார், செல்வ கணேசன். பவுல்ராஜ், வடக்கு பாறைப்பட்டி கிளை செயலாளர் பெருமாள் ஆகியோர் இந்த பணியில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா காலம் நிறைவடையும் வரை இந்த பணியில் ஈடுபட போவதாக ஒன்றியச் செயலாளர் அஜாய் கோஷ் தெரிவித்துள்ளார்.