tamilnadu

img

கருத்தியல் போராட்டத்தின் மாபெரும் ஆயுதம் செம்மலர்

பொன்விழா கொண்டாட்டத்தில் தலைவர்கள், எழுத்தாளர்கள் பெருமிதம்

மதுரை, மார்ச் 15- இலக்கிய உலகில் தொடர்ந்து தடம் பதித்து 50-ஆவது ஆண்டு பொன்விழாவை கலை இலக்கிய மாத இதழான செம்மலர் ஞாயிறன்று மதுரையில் கொண்டாடியது. மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் நடைபெற்ற விழாவிற்கு செம்மலர் ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். துணை ஆசிரியர் சோழ.நாகராஜன் அனைவரையும் வரவேற்றார். பொன்விழா கொண்டாட்டத்தை எழுத்தாளரும் இதழின் முன்னாள் ஆசிரியரு மான எஸ்.ஏ.பெருமாள் உற்சாக கரவொலிக் கிடையே துவக்கி வைத்தார். விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என். சங்கரய்யா, செம்மலர் முன்னாள் ஆசிரி யர் கு.சின்னப்பாரதி ஆகியோரின் வாழ்த்து ரைகள் காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பப் பட்டது. தீக்கதிர் முதன்மைப் பொதுமேலாளர் க.கனகராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் வழங்கிய சந்தாக்களைப் பெற்றுக் கொண்டு வாழ்த்திப் பேசினார். முன்னதாக விடுதலைப்போராட்ட வீரர் என்.சங்கரய்யா செம்மலர் இரண்டு சந்தாவை  துணையாசிரியர் அ.குமரேசனிடம் கொடுத்து அனுப்பியிருந்தார். அதை க.கனகராஜ் பெற்றுக்கொண்டார்.

செம்மலர் முகவர்களை செம்மலர் பொறுப்பாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான காமராஜ் கௌரவித்தார். செம்மலரின் மூத்த துணையாசிரியர் தி.வரதராசனை சட்டமன்ற முன்னாள் உறுப் பினர் என்.நன்மாறன் சால்வை அணிவித்து கௌரவித்தார். அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மேடைக்கலைவாணர் என்.நன் மாறன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி, எழுத்தாளர் தேனி சீருடை யான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் நிறைவுரையாற்றினார்.

நிகழ்வில் செம்மலர் ஆசிரியர்குழு உறுப்பினர்கள்  மதுக்கூர் இராமலிங்கம், அ.குமரேசன், சோழ.நாகராஜன், ஸ்ரீரசா, இரா.நாறும்பூநாதன், எஸ்.பி.ராஜேந்திரன், த.ஜீவலட்சுமி ஆகியோர் பாராட்டப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் இரா.விஜயராஜன் (மதுரை மாநகர்), சி.இராமகிருஷ்ணன் (மதுரை புறநகர்), ஆர்.சச்சிதானந்தன் (திண்டுக்கல்), டி.வெங்கடேசன் (தேனி), கே.அர்ச்சுணன் (விருதுநகர்), கே.வீரபாண்டி யன் (சிவகங்கை), வி.காசிநாததுரை (இராம நாதபுரம்) ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களை செம்மலர் பாராட்டி கௌரவித்தது. நிகழ்வை தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராம லிங்கம் தொகுத்து வழங்கினார். பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன் நன்றி கூறினார். முன்னதாக கரிசல் கருணாநிதியின் இசைப் பாடல் நிகழ்வு நடைபெற்றது.

இளம் படைப்பாளிகள்

செம்மலர் ஆசிரியர் ச.தமிழ்செல்வன் பேசுகையில், தமிழகத்தில் எத்தனையோ இலக்கிய இதழ்கள் வெளிவந்தன. வெளி வந்து கொண்டிருக்கின்றன. இடதுசாரி இயக்கத்தின் நீட்சியாக தொடர்ச்சியாக செம்மலர் வெளிவந்துகொண்டிருக்கிறது. செம்மலர் ஒரு நாற்றாங்கால், இளம் படைப்பாளிகளை உருவாக்கி வருகிறது. இலக்கியம் ஒரு மனிதனை தகவமைக்கும் வல்லமை படைத்தது. அந்தப் பணியை செம் மலர் மேற்கொண்டுவருகிறது. இலக்கியத்தை யும் கம்யூனிஸ்ட்டுகளையும் பிரிக்க முடி யாது. இலக்கிய வாசிப்போடு தங்களது வாழ்க்கையை பிணைத்துக் கொண்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். காரல் மார்க்ஸ். ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங், பிடல் காஸ்ட்ரோ, இஎம்எஸ் நம்பூதிரிபாட் போன்ற தலைவர்கள் சிறந்த வாசிப்பாளர்கள். இருளை நோக்கி இந்தியா சென்று கொண்டி ருக்கும் இந்தத் தருணத்தில் புதிய வெளிச் சத்தை பாய்ச்ச வேண்டியது அவசியம். அந்தப் பணியை எழுத்து வடிவில் செம்மலர் செய்து கொண்டிருக்கிறது. நூற்றாண்டை நோக்கிய பயணத்தில் நம்மை நாம் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வோம் என்றார்.

குன்றக்குடி அடிகளார் வழங்கிய சந்தா

முன்னாள் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் பேசுகையில், தமிழ் மண்ணில் தொடர்ந்து 50  ஆண்டுகள் நிலைத்து நின்று தனது இலக்கியப் பயணத்தை தொடர்கிறது செம்மலர். இளம் எழுத்தாளர்களை, கவிஞர்களை உருவாக்கி, பயிற்சியளித்து, வளர்த்துவரும் பயிற்சிப் பட்டறை செம்மலர். செம்மலர் மூன்றாவது இதழை குன்றக்குடி அடிகளாரிடம் நான் கொடுத்தேன். அவரோ, இலக்கிய இதழை தொடர்ந்து நடத்த முடியுமா எனக்கேட்டதோடு, செம்மலர் வீரியமான இடதுசாரி எழுத்தா ளர்களைக் கொண்டு வெளிவர வேண்டும். ஒழிக்க வேண்டியவற்றை ஒழிக்க வேண்டு மென்றார். செம்மலரின் முதல் ஆயுள் சந்தா தாரர் குன்றக்குடி அடிகளார். இன்று நாடு கொந்தளிப்பான நிலையில் உள்ளது, மத நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மை யையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதை இலக்கிய வடிவில், கட்டுரை களாக, கவிதைகளாக, நேர்காணல்களாக  செம்மலர் கொடுத்துக்கொண்டிருக்கிறது. சமூகமாற்றத்தை உருவாக்குவோம் என சபதம் மேற்கொண்டுள்ள இதழ் செம்மலர்  ன்றார்.

பேசுவதை விட படிப்பது நல்லது

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன் பேசுகையில், மதுரை சட்டக் கல்லூரி யில் தாம் பேசிய சமூகமும்-இலக்கியமும் என்ற உரை கட்டுரையாக முதன் முதலில் செம்மல ரில் வெளியானது எனக் கூறினார். “எனது தந்தை தாமரை, சோவியத்நாடு இதழ்களை வீட்டிற்கு வரவழைத்தார். இதைத் தொட ர்ந்து செம்மலரையும் வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று வரை நானொரு செம்மலர் வாசகன். பல படைப்பாளிகளை உருவாக்கியது மட்டுமல்ல அவர்களை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தி அவர் களை நிலைநிறுத்திய பெருமை செம் மலரையே சாரும். பேசுவதை விட படிப்பது நல்லது. படிப்பது தான் ஆழ்நிலை தியானம். தொழிலாளி வர்க்கம் பெற்றெடுத்த கேடயம் மென்மேலும் வளரும். வளர துணை செய்வோம்” என்றும் அவர் கூறினார்.

‘எனது தாய்மடி’

எழுத்தாளர் தேனி சீருடையான் பேசுகை யில், செம்மலர் என்ற திறவுகோலிலிருந்து வெளிவந்தவன் நான். 1979-ஆம் ஆண்டு “வெயில்” என்ற எனது கவிதை முதன் முதலில் செம்மலரில் பிரசுரமானது. செம்மலர் எனது தாய்மடி. செம்மலர் உழைப்பாளி மக்கள் அனைவர் கைகளிலும் தவழவேண்டும் என்று புகழாரம் சூட்டிய சீருடையான் உழைப்பாளி மக்களின் கைக்கு அரசு வரவேண்டுமென்றார்.

கருத்துப் போராட்டத்தின் கையாயுதம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலை ஞர்கள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ஆத வன் தீட்சண்யா பேசுகையில், கம்யூனிஸ்ட்டு களுக்கும் இலக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வு, ஒடுக்குமுறை, பாரபட்சம் ஆகிய வற்றை எழுதிவருபவர்கள் இடதுசாரி எழுத்தா ளர்களே. இன்றைய அரசியல் சூழலில் கருத் தியல் போராட்டத்தை செம்மலர் நடத்திக் கொண்டிருக்கிறது. அது தொடரும். ஒடுக்கப் பட்ட மக்களின் பிரச்சனைகள் குறித்து எழுது வதற்கு ஒரு பரந்தமேடையை செம்மலர் உரு வாக்கிக் கொடுத்திருக்கிறது. இலக்கியப் பத்திரிகைகளின் எண்ணிக்கை அருகி வருகிறது. வணிக நோக்கத்துடன் வெளிவரும் பத்திரிகைகள் கூட இலக்கிய பத்திரிகைகள் நடத்த முன்வந்தன. அதில் சில பத்திரிகை நின்றுவிட்டன. சில வெளிவருகின்றன. இலக்கியம் வணிகமயமாகி வரும் சூழலில் அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஊடக உலகம் ஏகபோகமயமாகி விட்ட நிலையில், செம்மலர் இலக்கிய வாசனை யோடு மிளிர்கிறது. அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், பத்திரிகைகளை அச்சிட்டு வெளியிட வேண்டாம், அதை  நாங்கள் இணையதளத்தில் வெளியிடு கிறோம் எனக் கூறி அதற்கு பல லட்சங்கள் தாருங்கள் என பேரம் பேசுகிறது. இந்நிலை யில் கருத்தியல் போராட்டத்தின் கையாயுத மாக விளங்கும் செம்மலரை பாதுகாப்பது அவ சியம். அதைப் பாதுகாக்கும் கண்களாக நாமிருப் போம். இன்றைய காலத்தில் ஏராளமான தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. புதுமை களை கைக்கொண்டு செம்மலரை வெற்றி நடை போடச்செய்வோம் என்றார்.

செம்மலருக்கு அழைத்து வந்த ‘இரண்டு லட்சம் கால்கள்’

செம்மலர் ஆசிரியர் குழுவில் துணையாசிரி யாகப் பணியாற்றியவரும் மதுரை மக்க ளவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் தனது நிறைவுரையில், “1991-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14-ஆவது அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதற்கு மதுரை புறநகர் மாவட்டத்திலிருந்து தொண்டராக ஒரு  அப்பளக் கட்டுடன்” அனுப்பி வைக்கப் பட்டேன். அந்த மாநாட்டில் மறைந்த தலை வர்கள் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இ.கே.நாயனார், பசவபுன்னையா ஆகியோருக்கு பணி செய்தது மறக்க முடி யாதது. மாநாடு நிறைவடைந்து மதுரை திரும்பிய பின் ‘சென்னையை உலுக்கிய இரண்டு லட்சம் கால்கள்’ என்ற தலைப்பில் மாநாடு குறித்து கட்டுரை ஒன்று தீக்கதிருக்கு எழுதியிருந்தேன். அதைப்பார்த்த ஆசிரி யர் கே.முத்தையா என்னை அழைத்து  தீக்கதிரில் பணியாற்றுமாறு கேட்டுக்கொண் டார். அப்படித்தான் செம்மலர் இதழ் பணி கிடைத்தது. செம்மலரில் பணியாற்றிய எனக்கு அது தத்துவார்த்தப் பள்ளியாக இருந்தது. அன்றைக்கும் இன்றைக்கும் துணையாசிரிய ராக இருக்கும் தோழர் தி.வரதராசன் ஒரு துலாக்கோல் போல் பணியாற்றினார். பணி யாற்றிக் கொண்டிருக்கிறார். செம்மலர் ஆசிரி யராக இருந்த பேரா.அருணன், செம்மல ரோடு ரத்தமும் சதையுமாக தன்னை பிணை த்துக்கொண்ட மேலாண்மை பொன்னுச்சாமி, அறிவாசான் எஸ்.ஏ.பெருமாள், இன்றைய ஆசிரியர் ச.தமிழ்செல்வன் போன்றவர்கள் என்னை இலக்கியவாதியாக செதுக் கினார்கள். வரலாற்றின் தொடர்ச்சியாக முற்போக்கு இலக்கியங்களை தொடர்ந்து முன்னெடுப்பதில் நூற்றாண்டை நோக்கி செம்மலர் பயணிக்கிறது. மார்க்சிய தத்துவம் மூலம் தான்  சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரமுடியும். அதை அனைவரும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

இலக்கிய பத்திரிகைகள் சுருங்கி வரும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செம்மலரை தொடர்ந்து நடத்தி வருகிறது. பத்திரிகை ஒரு அமைப்பாளன் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நூற்றாண்டை நோக்கி பயணப்படும் செம்மலர் அதன் வீரிய மும், வேகமும் குறைந்துவிடாமல் இடதுசாரி, முற்போக்கு இலக்கியங்களை முன்னெடுத்துச் செல்லும் என்றார். முன்னதாக விழாவில் வரவேற்புரை யாற்றிய துணையாசிரியர் சோழ.நாகராஜன், ஒரு இதழ் கூட நிற்காமல் ஒரு இலக்கிய இதழ்  வெளிவந்து  இன்றைக்கு 50-ஆவது ஆண்டு  பொன்விழாவைக் கொண்டாடுகிறது செம்மலர். இதன் வெற்றிக்குக் காரணம் எழுத்தாளர்கள், வாசகர்கள், முகவர்கள். உற்சாகமும், வீரியமும் குறையாமல் வாசகர்கள் ஒத்துழைப்போடு செம்மலர் தனது பயணத்தைத் தொடரும் என்றார்.

பொன்விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் மதுரையைத் தொடர்ந்து இந்த விழா திருநெல்வேலி, புதுக்கோட்டை, அவினாசி நகரங்களில் நடைபெறவுள்ளது. முத்தாய்ப்பாக செம்மலர் பொன்விழா நிறைவு விழா சென்னையில் நடைபெறுகிறது என்று அறிவித்தார். நிகழ்வில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், தீக்கதிர் செய்தி ஆசிரியர் ப.முருகன், திருச்சிராப்பள்ளி பொது மேலாளர் பன்னீர்செல்வம், விளம்பர மேலாளர் ஆர்.உமாபதி, ஜாப்ஒர்க் மேலாளர் பாண்டியராஜன், தீக்கதிர் ஊழியர்கள். செம்மலர் வாசகர்கள், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், கிளைச்செயலாளர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

செய்தி : ச.நல்லேந்திரன், இலமு,  படங்கள் : ஜெ.பொன்மாறன்