tamilnadu

img

வடகரயில் ரத்த சாட்சிகளின் குடும்ப சங்கமம்

வடகர, ஏப்.20-வன்முறைக் கூச்சல் எழுப்புவோருக்கு எதிராககண்ணீரும், கவலையும் வாழ்க்கை அனுபவமாக கொண்ட அவர்கள் ஒன்று கூடினர். கொலை வாளு க்கும், வெடிகுண்டுக்கும் பலிகொடுத்த தங்களது உறவுகளின் நீங்காத நினைவுகளோடு வடகரயில் சங்க மித்திருந்தனர். எதிரிகளின் அபத்தமான - பொய் பிரச்சாரங்களுக்கு எதிரான சத்திய சாட்சியமாக இந்த குடும்ப சங்கமம் நெகிழ்ச்சி யோடும், கம்பீரத்தோடும் நடந்தது. வடகரயில் ஆர்எஸ்எஸ் சங்பரிவார், காங்கிரஸ், எஸ்டிபிஐ குண்டர்களின் தாக்குதலுக்கு ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் கடந்த காலங்களில் பலியாகி யுள்ளனர். பலர் வாழ்நாள் முழுவதும் ஊனத்துடன் வாழ வேண்டிய அவல நிலைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். அத்தகைய ரத்த சாட்சியான பி.ஜெய ராஜன் இப்போது வடகர மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். ரத்த சாட்சிகளின் குடும்ப சங்கமம் நிகழ்ச்சியில், மறைந்த தங்களது குடும்பத்தினரின் நினைவுகளையும், அரசியல் கடமைகளையும் சுமந்தபடி ஆயிரக்கணக்கானோர் பங் கேற்றனர். நிகழ்ச்சியை சிபி எம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். வேட்பா ளர் பி.ஜெயராஜன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். ரத்தசாட்சிகளின் குடும்பத்தின ருக்கு சிவப்பு சால்வைகள் அணிவித்தும் சிவந்த ரோஜா மலர்கள் அளித்தும் வரவேற்பளிக்கப்பட்டது.

;