சென்னை,மார்ச் 6- தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார். கரூர் மாவட்டம், காவிரி வடிநிலத்திலுள்ள கட்டளை உயர்மட்ட கால்வாய் பாசன அமைப்பை மறு சீர மைப்பதற்கான பணிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இது தவிர, பொதுப்பணித்துறையின் 209 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 33 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். தேனி மாவட்டம், தப்புக்குண்டு கிராமத்தில் கட்டப்படவுள்ள தேனி அரசு சட்டக் கல்லூரிக் கட்டடம், விடுதிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 7 பேருக்கு பணிநியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.