திருவில்லிபுத்தூர், பிப்.24- திருவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான குளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக நகர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் உதவியுடன் சட லத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர், திருவில்லி புத்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (50) என்பது தெரிய வந்தது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.