tamilnadu

img

தென்காசி தனி மாவட்டம் : எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

மதுரை, நவ.22- திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசி தனி மாவட்டமாக அறிவித்த தமிழக அரசு அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் அரசின் கொள்கைரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவி லை சேர்ந்த சுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் , “திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தனி மாவட்ட மாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளி யிட்டது.தென்காசியை தனி மாவட்டமாக பிரிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 17- ஆம் தேதி நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மக்கள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆட்சேபணைகளும், சங்கரன்கோவிலை புதிய மாவட்டமாக அமைப்பதற்கான கருத்துக் களும் தெரிவிக்கப்பட்டுள்ளன . தாலுகா வாரி யாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, மாவட்டத் தின் அனைத்து தரப்பு மக்களின் கருத்தைக் கேட்ட பின்பு புதிய சங்கரன்கோவில் மாவட்ட மும் அமைக்க உத்தரவிட வேண்டும்,இதுதொடர் பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப் பட்டுள்ளது.ஆனால் மனு மீது பதில் இல்லை. எனவே திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிய தென்காசி மாவட்டம் அமைக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு வெள்ளியன்று  நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.