tamilnadu

img

மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைப்படி மாணவர்கள் தேர்ச்சி

சென்னை, ஜூன் 26- இந்திய மருத்துவக் கவுன்சில் விதி முறைப்படி தியரியில் 50 விழுக்காட்டிற்கும் குறைவான மதிப்பெண் பெற்ற இரு மாண வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவித்து  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவ கல்  லூரியைச் சேர்ந்த 3ஆம் ஆண்டு மருத்துவ  மாணவர்கள் தருண் ஜெரூசன், சலீல் ராம்  ஆகிய இரண்டு பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், புதுச்சேரி பல்கலைக்கழகம் மாணவர்களுடைய தேர்வு மதிப் பெண்ணைக் கணக்கிடுவதில், இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறையை பின் பற்றாமல், எம்.பி.பி.எஸ் பாடப்பிரிவில், குழந்தைகள் நலம் பாடத்தில் தியரியில் 50 விழுக்காட்டிற்கும் குறைவாக மதிப்பெண் பெற்றதாக கூறி நாங்கள் தேர்ச்சி பெறவில்லை என்று அறிவித்தது.

உச்சநீதிமன்றம் தனது பல்வேறு தீர்ப்பு களில், மருத்துவக் கவுன்சில் விதிமுறை களையே பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அத னால், செய்முறை தேர்வில் 50 விழுக்காடு குறைவாக மதிப்பெண் பெற்ற எங்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணி யன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், அதனைப் பின்பற்றி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு களின் அடிப்படையிலும் மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிட்டு வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செய்  முறைத் தேர்வில் 50 விழுக்காடு குறை வான மதிப்பெண் எடுத்தாலும், இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைப்படி மாண வர்கள் இருவரும் தேர்ச்சி பெற்றதாக அறி வித்து உத்தரவிட்டார்.

;