சென்னை, ஆக. 6- வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்காக வாக்காளர் சரி பார்ப்பு திட்டத்தை நாடு முழு வதும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படுத்த தேர்தல் ஆணை யம் முடிவு செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செய லகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரத சாகு, வரும் 16 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும் வாக்கா ளர் சரிபார்ப்பு திட்டத்தின் மூலம் வாக்காளர் அட்டையில் புகைப் படம், பிறந்த தேதி, முகவரி மாற்றம், திருத்தம் ஆகியவற்றை வாக்காளர்கள் மேற்கொள்ள முடியும்” என்றார்.
1950 என்ற வாக்காளர் உதவி மைய தொலைபேசி எண், அரசு இசேவை மூலம் இந்த பணிகளை வாக்காளர்கள் மேற்கொள்ள முடி யும் என்றும், இதற்காக பிரத்யேக செயலியை தேர்தல் ஆணை யம் விரைவில் வெளியிட உள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மாற்றங்கள் செய்து புதிய வாக்காளர் அட்டை பெற 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், புதிய வாக்கா ளர்களுக்கு மட்டும் கட்டண மில்லாமல் அட்டை வழங்கவும் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறி னார். வாக்காளர் சரிபார்ப்பு திட் டத்தின்போது வாக்காளர்களின் மொபைல் எண் மற்றும் இ- மெயில் முகவரி பெறப்படவுள்ள தால், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படும்போதோ, சேர்க்கப்படும்போதோ அதன் விவரம் சம்பந்தபட்ட நபரின் மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே உள்ள வாக்குப்பதிவு மையங் களை ஆய்வு செய்து, கூடுதல் மையங்கள் தேவைபடுகிறதா அவ்வாறு இருப்பின் அவற்றை உருவாக்குவது, பூத் சிலிப்பு வழங்கும் பணிகளை மேம்படுத்து வது உள்ளிட்ட பணிகளும் மேற் கொள்ளப்படவுள்ளதாக குறிப் பிட்டார். மேலும், வரைவு வாக்கா ளர் பட்டியல் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்படவுள்ள தாகவும், அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதலுக்கான சிறப்பு முகாம்களுக்கான தேதி அறி விக்கப்பட்டு, வரும் ஜனவரியில் புதிய இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடப்படும் என்றும் சத்யபிரதாசாகு தெரிவித்தார்.