சென்னை, ஜூன் 7 ஏரி-குளங்கள் அனைத்தும் வேகமாக வறண்டு விட்டதால் மக்கள் குடிநீருக்காக அவதிப்படு கிறார்கள்.குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு ரூ.400 கோடியை ஒதுக்கி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு குடி நீர் வாரிய உயர்அதிகாரி கூறிய தகவல்கள் வருமாறு:- தமிழகத்தில் 7.21 கோடி மக்கள் உள்ளனர். இதில் 4.23 கோடி பேருக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலமும் 2.98 கோடி பேருக்கு உள்ளாட்சி அமைப்பு கள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து விட்டது. இதனால் கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் தரை மட்டத் தில் இருந்து 20 மீட்டருக்கு கீழே தண்ணீர் சென்று விட்டது. இந்த மாதம் 17.5 மீட்டர் ஆழத்தில் நிலத் தடி நீர் மட்டம் உள்ளது. சில இடங்களில் தண்ணீர் வறண்டும் உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேட்டூர், பவானி சாகர், அமராவதி, பெரியாறு, வைகை, பாபநாசம், மணிமுத் தாறு, பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், சோலையாறு பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி, சிறு வாணி, பில்லூர் ஆகிய அணை களை நம்பியே வாரியத்தின் 556 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் உள்ளன.
குடிநீருக்கு பயன்படுத்தப்ப டும் மின்மோட்டார்கள் குழாய் கள் போன்றவைகளை மாற்றி அமைக்க மாநில பேரிடர் நிவா ரண நிதி மூலம் ரூ.27 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன்மூலம் 325 திட்டங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வரு கிறது. இது தவிர 99 கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் ரூ.244 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பொருத் தப்பட்ட பழைய குழாய்கள் மாற்றியமைக்கும் பணியும் நடைபெறுகிறது. குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்க ஆங்காங்கே கிணறுகளில் இருந்தும் போர்வெல் மூலம் தண்ணீர் வினி யோகம் செய்யப்பட்டு வரு கிறது. மாநிலம் முழுவதும் குடிநீர் வினியோகம் சீராக நடை பெறுவதை கண்காணிக்க 556 திட்டங்களும், 218 மண்டலங்க ளாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 258 சிறப்பு குழுக்க ளும் அமைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வினியோகம் தொடர் பாக பொதுமக்களிடம் இருந்து கருத்துக் கேட்பதற்காக அவசர தகவல் மையம் ஒன்று ஏற்படுத் தப்பட்டு உள்ளது மேலும் 944580 2145 என்ற எண்ணில் பொது மக்கள் தகவல்களை தெரிவிக்க லாம். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இன்றைய சூழ்நிலையில் ஆற்றுப்படுகைகளின் மேல் பரப்பில் 52 சதவீத ட்டங்களும், 27 சதவீதம் நீர் உரிஞ்சும் கிணறு கள் மூலமும் 16 சதவீதம் நீர் சேமிக்கும் கிணறுகள் மூலமும் 5 சதவீதம் இதர வழிகள் மூல மும் தண்ணீர் பெறப்பட்டு விநி யோகம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.